கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. அவரது கணவர் குருசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இந்நிலையில், கடந்த 13.11.2012 அன்று இரவு, இரயில் நிலையம் அருகேயுள்ள ஒரு மரத்தடியில் லட்சுமி படுத்திருந்தார்.
அப்போது லட்சுமியை மேட்டுப்பாளையம் நரிப்பள்ளத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி காட்டூரான் (40) என்பவர் ஆசைக்கு இணங்க அழைத்தார். அதற்கு லட்சுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காட்டூரான், லட்சுமி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்த தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. பெண்ணை தீ வைத்து எரித்துக் கொன்ற காட்டூரானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.