இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது, ஒரு வாரத்திற்கு முன்னர் சென்னையில் மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பற்றி ஒரு கூட்டத்துக்கு அழைத்தார்கள். ஆனால் இந்த நாட்டில் மரபணு மாற்றப்பட்ட முதலமைச்சர் இருக்கார், அதைப்பற்றி யாரும் இங்கு கவலைப்படவில்லை. மத்திய அரசு அதைத்தானே செய்கிறது.
முதலமைச்சருக்கு ஒரு வீரியம் இருக்கும், ஒரு குணம் இருக்கும். ஆனால் அதெல்லாம் வேண்டாம் என ஊசியப் போட்டு மரபணு மாற்றப்பட்ட முதலமைச்சரைத்தான் வச்சிருக்காங்க. மக்களைப் முழுவதும் மரபணு மாற்றப்பட்ட ஆடாக மாற்ற முயற்சி நடக்கிறது என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.