முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன், எயிம்ஸ், அப்பல்லோ மருத்துவர்கள் என மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் அடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இவர் தாக்கல் செய்த மனுவில், முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து அதில் அரசு மருத்துவர்கள், நீதித்துறை அதிகாரிகள், ஜெயலலிதாவின் உறவினர்கள் கொண்ட குழு அமைத்து முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என கூறப்படுகிறது.