திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்புக்கு அருகில் சுடுகாடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு பலர் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் சூர்யா(23), சுமதி(43), ஆறுமுகம்(65) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரை ஒரு மர்ம விலங்கு கை, கால்களில் கடித்து குதறியது.