புல்லாங்குழல் இசைக் கருவிக்கு தனித்துவத்தையும், தனிச் சிறப்பையும் ஏற்படுத்திக் கொடுத்த "புல்லாங்குழல்" என்.ரமணி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.
"சங்கீத கலாநிதி", "சங்கீத கலை சிகாமணி", "பத்மஸ்ரீ", "பத்மபூஷண்" என்று எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள என்.ரமணி, புல்லாங்குழல் இசையில் தனக்கென தனி இடத்தைப் பெற்று பெரும் புகழை தனதாக்கிக் கொண்டவர்.
ரமணியின் மறைவு தமிழ் இசை உலகிற்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கர்நாடக இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளார்.