இதனால் இன்ஸ்பெக்டருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் அந்த இளைஞரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், இன்ஸ்பெக்டரை கடுமையாக தாக்கி உள்ளார். பின் இருவரும் கட்டிப்புரண்டு கடுமையாக சண்டையிட்டனர். அதை பார்த்த பொது மக்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டருக்கு கடுமையாக காயங்கள் ஏற்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதை அடுத்து, இன்ஸ்பெக்டர், பெரியமேடு காவல் நிலையத்தில் இது தொடர்பாக, புகார் அளித்தார்.