தினகரனுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த 'பரிசுப்பெட்டி'

வெள்ளி, 29 மார்ச் 2019 (08:31 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் என்ற பிரபலமில்லாத சின்னத்தை பெற்று இரட்டை இலை , உதயசூரியன் என்ற இரண்டு சின்னங்களையும் தோற்கடித்து சாதனை செய்தவர் டிடிவி தினகரன். குறிப்பாக குக்கரிடம் உதயசூரியன் தனது டெபாசிட்டை இழந்தது. அந்த ராசியான குக்கர் சின்னத்தை வரும் தேர்தலிலும் பயன்படுத்த தினகரன் எடுத்த சட்டப்போராட்டம் தோல்வி அடைந்தது
 
இந்த நிலையில் தனக்கு பொதுச்சின்னமாவது வழங்க வேண்டும் என்ற தினகரனின் கோரிக்கை நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டதால் சற்றுமுன் அவருக்கு 'பரிசுப்பெட்டி' என்ற பொது சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த சின்னத்தை அமமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வரும் ஏப்ரல் 18 அன்று நடைபெறும் தேர்தலில் பயன்படுத்தி கொள்ளலாம். 
 
குக்கரை குறுகிய நாட்களில் ஆர்.கே.நகர் முழுவதும் கொண்டு சென்ற தினகரனால் தமிழகம் முழுவதும் இன்னும் 20  நாட்களில் இந்த பரிசுப்பெட்டியை கொண்டு செல்ல முடியுமா?. தமிழக மக்கள் இந்த தேர்தலில் அவருக்கு வெற்றி என்ற பரிசுப்பெட்டியை கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்