இது தொடர்பாக வியாழனன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலச்சந்திரன், கேரளா கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து உள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை காலத்தின் முதல் மாதத்தில் தமிழகத்தில் வழக்கத்தை விட 40 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.