மேலும், நாங்கள் இலவசத்தை நம்பவில்லை. இலவசங்களை அறிவிக்கவில்லை! மாநில தொழில் வளர்ச்சிக்கும், மக்கள் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை அறிவித்து எங்கள் பிரசாரத்தை முன்னெடுத்து சென்றோம். இளைஞர் நலனுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்தோம்.
ஐம்பது வருடங்கள் பின் தங்கியிருந்த தமிழ்நாட்டை ஐந்து வருடங்களில் முன்னுக்கு கொண்டு வரும் யதார்த்தமான சாத்தியம் உள்ள திட்டங்களை முன்நிறுத்தி இருந்தோம். ஆனால், மக்கள் தந்த இந்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்றார் அன்புமணி ராமதாஸ்.