பத்து ரூபாய் நுழைவு கட்டணமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை நாட்களில் 11 மணி முதல் 8:30 மணி, வார நாட்களில் இரண்டு மணி முதல் 8:30 மணி வரை நடைபெற்றது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில், சென்னை புத்தகக் காட்சி இன்று நிறைவு பெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.