அன்று முதல் பொது சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறியதாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் வந்ததாக பிரவீண்குமார் தெரிவித்தார். அந்த புகார்களின் அடிப்படையில் 2,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாவும், மேலும் தமிழகமெங்கும் ஒலிபெருக்கி விதிகளை மீறியதாக 20 வழக்குகள், வாகன விதிகளை மீறியதாக 262 வழக்குகள், சட்டவிரோதமாக பேசியதாகவும், கூட்டம் நடத்தியதாகவும் 81 வழக்குகள், பதிவு செய்யப்ட்டுள்ளதாக பிரவீண்குமார் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுத்ததாக 90 வழக்குகளும், மேலும் சில விதிமீறல்கள் தொடர்பாக 436 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக மொத்தத்தில் பல்வேறு தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 3,793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.