அவர் பேசியதாவது, தேமுதிக அமைத்துள்ள கூட்டணி புது கூட்டணி, தமிழ்நாடு மக்கள் விரும்பிய கூட்டணி, முதல் வெற்றி அணி கூட்டணி. லஞ்சம், ஊழலற்ற ஆட்சியை அமைக்க திறமையுள்ளவர் நரேந்திரமோடி.
விழுப்புரம் தேமுதிகவின் கோட்டை. இங்குதான் உளுந்தூர்பேட்டையில் லஞ்சம் ஒழிப்பு மாநாடு நடத்தி காட்டினோம். ஜெயலலிதா தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் மின்வெட்டு, தண்ணீர் இல்லை. டாஸ்மாக் கடைகள்தான் அதிகமாக திறந்துள்ளார். டாஸ்மாக் கடையில் ரூ.24 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது.