இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் அருகேயுள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் தீனதயாளன் என்ற நீதிவளவன்(வயது 22) தற்கொலை செய்வதற்காக 100 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து, தனது உடையில் அவர் வைத்திருந்த கடிதத்தில், "எனது உடல் ஐந்து நாட்கள் இருக்க வேண்டும். ஈழம் வெல்லும், இதை காலம் சொல்லும். திருமாவளவன் போராட்டம் வெல்லும்! போரை நிறுத்து! இந்திய அரசே போரை நிறுத்து! திருமாவளவன் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகளுக்கு நன்றி!" என்று கூறியுள்ளார்.