கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே 3-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கோஷமிட்டு அவர்களது படங்களை தீ வைத்து எரித்தனர்.
மேலும் காங்கிரஸ் கொடிகளையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.