கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (42). இவர் வாணியம்பாடியில் இருந்த தனது மனைவி, 12 வயது மகள், 2 மகன்கள் ஆகியோரை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரி அருகே இரு சக்கர வாகனம் வந்தபோது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்து கொண்டிருந்த லாரி, இரு சக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்த 5 பேரும் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.