இலங்கை பிரச்சனை: ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 27 ஜனவரி 2009 (17:24 IST)
இல‌ங்கை‌யிலஅப்பாவிதத‌மிழ‌ர்க‌ளஅந்நாட்டஇராணுவத்தினரபடுகொலை செய்வதைகக‌ண்டி‌த்தும், அதனதடுத்தநிறுத்வலியுறுத்தியுமசெ‌ன்னை த‌லைமை‌ச் செயலக‌ம் மு‌ன்பு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் செ‌ய்ய முய‌‌ன்ற செ‌ங்க‌ல்ப‌ட்டு அரசு ச‌‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 40 பே‌ரைககாவல்துறையினரகைது செ‌ய்தன‌ர்.

செ‌ன்னை தலைமை‌ச் மு‌ன்பு இன்று காலை கூடிய சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீரென்று ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் செ‌ய்ததுடன், சாலை ம‌றிய‌லில் ஈடுப‌ட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தனர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட மாணவ‌ர்க‌ள் அனைவரு‌ம் ‌பி‌ன்ன‌ர் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவும் அவர்கள் கூறினர்.

த‌‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தியது பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்