மதுரை எ‌ஸ்.‌பி.யாக மனோகர் ‌‌மீ‌ண்டு‌ம் ‌நியமன‌ம்

செவ்வாய், 20 ஜனவரி 2009 (10:58 IST)
மதுரை மாவ‌ட்ட‌ம் ‌திரும‌ங்கல‌ம் ச‌ட்டம‌ன்ற இடை‌த்தே‌ர்த‌லி‌ன் போது தே‌ர்த‌ல் ஆணைய‌த்தா‌ல் இட‌மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட மதுரை மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் மனோகர் ‌‌மீ‌ண்டு‌ம் அ‌ந்த இட‌த்து‌க்கு இட‌ம் மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்பட‌்டு‌ள்ளா‌ர்.

திண்டுக்கல் காவ‌ல்துறை துணை தலைமை ஆ‌‌ய்வா‌ள‌ராக (டி‌.ஐ.‌ஜி) இருந்த கிருஷ்ணமூர்த்தி மதுரை காவ‌ல்துறை துணை தலைமை ஆ‌‌ய்வா‌ள‌ாகவும், மதுரை காவ‌ல்துறை துணை தலைமை ஆ‌‌ய்வா‌ள‌ராக இருந்த அமரேஷ் புஜாரி திண்டுக்கல் காவ‌ல்துறை துணை தலைமை ஆ‌‌ய்வா‌ள‌ராக இடமாற்றம் செய்யப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர்.

சென்னை பூக்கடை காவ‌ல்துறை துணை ஆணையராக இருந்த மனோகர், மதுரை மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாளராகவு‌ம், மதுரை மாவட்ட காவ‌ல்துறக‌ண்கா‌ணி‌ப்பாளராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா சென்னை பூக்கடை காவ‌ல்துறை துணை ஆணையராகவு‌ம் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை காவ‌ல்துறை துணை க‌ண்கா‌ணி‌‌ப்பாள‌ராக (ி.எஸ்.ி.) இருந்த சுந்தரேசன் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவ‌ல்துறை துணை க‌ண்கா‌ணி‌ப்பாளராகவும், திருப்பரங்குன்றம் காவ‌ல்துறை துணை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ராக (ஏ.எஸ்.ி) இருந்த பிரவீன் குமார் அபினவ் முத்துப்பேட்டை காவ‌ல்துறதுணக‌ண்கா‌ணி‌ப்பாள‌ராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இத‌ற்கான உ‌த்தரவை முதன்மைச் செயலர் மாலதி ‌‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்