நாகை உ‌ள்பட 4 மாவ‌ட்ட ப‌ள்‌ளிகளு‌க்கு நாளை ‌விடுமுறை!

திங்கள், 24 நவம்பர் 2008 (18:01 IST)
பல‌த்த மழை காரணமாக நாகை உ‌ள்பட நா‌ன்கு மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு நாளை ‌மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள் ‌விடுமுறை அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வங்க கடலில் இலங்கை கடற்கரையில் இருந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.

இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக த‌‌மிழக‌ம் முழுவது‌ம் பல‌த்த மழை பெ‌ய்து வரு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் நாகை, பெர‌ம்பலூ‌ர், ‌திருவாரூ‌ர், அ‌ரியலூ‌ர் ஆ‌கிய மாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்து வருவதா‌ல் ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு அ‌ந்தத‌‌ந்த மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள் நாளை ‌விடுமுறை அ‌‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்