900 போ‌லி மதுபா‌‌ட்டி‌ல் ப‌றிமுத‌ல்: 7 பே‌ர் கைது!

புதன், 23 ஏப்ரல் 2008 (11:42 IST)
கரூ‌‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் போ‌லி மது‌க்களை ‌வி‌ற்பனை செ‌ய்த ம‌ற்று‌ம் கட‌த்‌திய 7 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

கரூ‌ர் மாவ‌ட்ட‌ம் டி.வெ‌‌‌‌ள்ளலா‌ர்ப‌ட்டி‌யி‌ல் காவ‌‌ல்துறை‌யி‌‌ல் ரோ‌ந்து ப‌ணி‌‌யி‌ல் ஈடுப‌ட்டு கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது, இருச‌க்கர வாகன‌த்த‌ி‌ல் வ‌ந்த இர‌ண்டு பே‌ரி‌ட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌சோதனை நட‌த்‌தின‌ர். சோதனை‌யி‌ல் 48 போ‌லி மதுபா‌ட்டி‌ல்களை க‌ண்டு‌பிடி‌த்தன‌ர்.

விசாரணை‌யி‌ல் அவ‌ர்கள‌ி‌ன் பெ‌ய‌‌ர் ச‌ந்‌திர‌ன்சேகர‌ன் (35), த‌மிழ‌ன் (30) எ‌ன்று தெ‌ரியவ‌ந்தது. மேலு‌ம் அவ‌ர்கள‌ி‌ட‌ம் ந‌ட‌த்‌திய ‌தீ‌‌விர ‌விசாரணை‌யி‌‌ன் பே‌‌ரி‌ல், மு‌த்துலாத‌ம்ப‌ட்டி‌யி‌ல் உ‌ள்ள ஒரு ‌வீ‌ட்டி‌ல் பது‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த நூ‌ற்று‌க்கண‌க்கான போ‌லி மதுபா‌ட்டி‌ல்களை கை‌ப்ப‌ற்‌றின‌ர்.

அ‌ங்‌‌‌கிரு‌ந்த கா‌ரி‌ல் இரு‌ந்து 576 போ‌லி மதுபா‌ட்டி‌ல்க‌ளை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர். மொ‌த்த‌‌த்தி‌ல் 900 போ‌லி மதுபா‌‌ட்டி‌ல்களை கை‌ப்ப‌ற்‌றிய காவ‌‌ல்துறை‌யின‌ர் கட‌‌த்தலு‌க்கு காரணமான இரு ச‌க்கர வாகன‌‌ம், கா‌ர் ஆ‌கியவ‌ற்றை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்