நில முறைகேடு- அச்சுதானந்தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு
சனி, 14 ஜனவரி 2012 (10:07 IST)
நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக குற்றச்சாற்றப்பட்டுள்ள கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் மீது அந்த மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அச்சுதானந்தன் முதலமைச்சராக இருந்தபோது காசர்கோடு மாவட்டத்தில் அவரது உறவினருக்கு முறைகேடாக 2.3 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டதாக அந்தத் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சதி செய்தது, ஏமாற்றியது, ஆதாரங்களை அழித்தது ஆகிய குற்றச்சாற்றுகளில் அச்சுதானந்தன் உள்பட 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாற்று குறித்து அச்சுதானந்தன் கூறுகையில், தன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்தார்.