பீகாரில் ராகுல் பாச்சா பலிக்கவில்லை: காங்கிரஸ் ஒப்புதல்

புதன், 24 நவம்பர் 2010 (18:34 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்களார்களில் கவருவதில் ராகுல் காந்திக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்வதாக காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.

பீகார் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை தனித்து போட்டியிட வைத்து வெற்றிபெற வைப்பேன் என்று சூளுரைத்த ராகுல் காந்தியின் விருப்பப்படியே அக்கட்சி தனித்து போட்டியிட்டது.

இத்தேர்தலுக்காக ராகுல்காந்தி பீகாரில் பல முறை வலம் வந்து, ஏழைகளின் குடிசைகளுக்கெல்லாம் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் காங்கிரஸ் தலைவர் ஒருவர், பீகாரில் ராகுல்காந்தி தோல்வியடைந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொள்வதாகவும், பீகார் மக்களை கவர்வதில் அவருக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்