கிறிஸ்துமஸ்: குடியரசுத் தலைவர் வாழ்த்து

வியாழன், 24 டிசம்பர் 2009 (15:46 IST)
கிறிஸ்டுமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இயேசு கிறிஸ்து போதித்த அமைதி, ஒற்றுமை, சமாதானத்தை கடைபிடித்து அதன் வழிநடக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.

சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சகோதரர் என்ற கருத்தினை இயேசு கிறிஸ்து வலியுறுத்தியதாகவும் அவர் அந்த செய்தியில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்