தாலிபானுக்கு இந்தியா உதவி: பாக். குற்றச்சாற்றை நிராகரித்தார் பிரதமர்

வியாழன், 29 அக்டோபர் 2009 (14:11 IST)
பலுசிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு இந்தியா உதவி வருவதாகவும், பாகிஸ்தானை நிலைகுலைப்பதற்காக தாலிபானுக்கு இந்தியா பக்கபலமாக இருப்பதாகவும் பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாற்றை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார்.

ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பலுசிஸ்தானில் இந்தியாவின் பங்கு என்று கூறப்பட்டதில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், அதுபோன்ற குற்றச்சாற்றை கூறியவர்களுக்கு அது பொய் என்பது தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் இருந்து ஏவி விடப்படும் பயங்கரவாதத்தினால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டதுதான் உண்மை என்றும் அவர் கூறினார்.

தாலிபான் தீவிரவாதிகள் உலக முழுவதும் வன்முறையை ஏவிவிடும் நிலையில், இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் குற்ற்ச்சாற்று வேடிக்கையானது என்றார் பிரதமர்.

வெப்துனியாவைப் படிக்கவும்