மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிப்பதில் பாக்.குக்கு அக்கறை இல்லை: கிருஷ்ணா

சனி, 5 செப்டம்பர் 2009 (19:09 IST)
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிப்பதில் பாகிஸ்தானுக்கு அக்கறை இல்லை என்று அயலுறவுததுறஅமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குற்றம் சாற்றியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்பை தாக்குதல் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். எனினும், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் அக்கறை காட்டவில்லை என்றும் அவர் குற்றமசாற்றினார்.

நேபாளத்தில் இரண்டு அர்ச்சகர்கள் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது மிகவும் கண்டிக்கத் தக்கது என்றார். இந்திய அர்ச்சர்களுக்கு நேபாள அரசு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்