யுரேனியம் பற்றாக்குறை காரணமாக மொத்தம் 4,100 மெகா வாட் உற்பத்தித் திறன் உள்ள நமது முக்கியமான அணு மின் உலைகளில் 1,800 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
ரஷ்யா, ஃபிரான்ஸ், கஸகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நாம் அண்மையில் மேற்கொண்டுள்ள அணு ஒப்பந்தங்களின் பலனாக, புதிதாக அமைக்கப்பட்ட அணு உலைகள் உட்பட, நமது அணு உலைகளின் உற்பத்தித் திறன் இன்னும் 12 மாதங்களில் 6,000 மெகா வாட்டாக அதிகரிக்கும் என்று வர்த்தகம் மற்றும் மின்சாரத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் கூறினார்.
ஃபிரான்சில் இருந்து முதல் கட்டமாக 60 டன்கள் யுரேனியம் விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அணு சக்தித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.