பயங்கரவாத தடுப்பு சட்ட வரைவுகள் மாநிலங்களவையில் நிறைவேறியது
வியாழன், 18 டிசம்பர் 2008 (22:59 IST)
பயங்கரவாதத்தை ஒடுக்க தேச புலனாய்வு முகமையை ஏற்படுத்தவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கவும் வகைசெய்யும் சட்ட திருத்தமும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது.
இவ்விரு சட்ட வரைவுகளின் மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை அரசு கொடுக்க வேண்டும் என்ற நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப இந்த இரண்டு சட்டவரைவுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.