கல்பாக்கத்தில் உள்ள அணு மையங்களைச் சுற்றி 10 கி. மீ தொலைவிற்குள்ளும், 10,000 அடி உயரத்திற்குக் குறைவாகவும் விமானங்கள் பறக்கத் தடை விதித்து மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. தற்போது இதை மீண்டும் வலியுறுத்தி எல்லா விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் தாக்கீது அனுப்பியுள்ளது.
மும்பை தாக்குதல்களை அடுத்து, வான்வழிப் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்ததால், பாதுகாப்பை மறு ஆய்வு செய்வது என்று சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில்தான் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.