மேகாலயா சட்டப் பேரவையில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 59 இடங்களுக்கு கடந்த 3-ஆம் தேதி நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 89.05 விழுக்காடு வாக்குகள் பதிவானது.
இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி முடிவு அறிவிக்கப்பட்ட 22 இடங்களில் காங்கிரஸ் 12 இடங்களைக் கைப்பற்றியது.
மேகாலயா அரசியல் வரலாற்றில் எந்த கட்சியும் தனிப் பெரும்பான்மை பலத்தை பெற்றது இல்லை. அங்கு கடந்த 35 ஆண்டுகளில் அமைந்த 18 அரசுகளில் பெரும்பாலான அரசுகள் பதவிக்காலம் முடிவதற்குள் கவிழ்ந்து விட்டன.
மேகாலயாவில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்தன. தேர்தல் முடிவுகளும் அப்படியே இருந்தன.