நடிகர் சல்மான் கான் கைது செய்யப்பட்டார்

Webdunia

சனி, 25 ஆகஸ்ட் 2007 (15:42 IST)
இந்தி நடிகர் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக விமானத்தில் வந்து இறங்கியதும் காவல்துறையினர் ஜோத்பூரில் அவரை கைது செய்தனர்.

மானை வேட்டை ஆடிய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சல்மான் கான், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த ஜோத்பூர் அமர்வு நீதிமன்றம் அவரது முறையீட்டை நிராகரித்தது மட்டுமின்றி, அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பிடி ஆணை பிறப்பித்தது.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க இன்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வந்த சல்மான் கான், ஜோத்பூர் வந்து இறங்கியதும் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இன்று மாலைக்குள் அவர் ஜோத்பூர் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்