முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புகளின் மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணியளவில் சிறிலங்கப் படையினர் சராமாரியாக எறிகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் விடுதலைப் புலிகள் ஆதரவு இணைய தளமான புதினம் தெரிவிக்கிறது.