தலாய் லாமாவுக்கு சீன அதிபர் புதிய நிபந்தனை!

வெள்ளி, 28 மார்ச் 2008 (12:34 IST)
புத்த மதத்துறவி தலாய் லாமாவுக்கு சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ புதிய நிபந்தனை விதித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் திபெத் நாடு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையை எதிர்த்து லாசாவில் கடும் வன்முறை நிக‌ழ்‌ந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் புஷ், சீன அதிபரை தொடர்பு கொண்டு இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீன அதிபர் ஜிண்டாவோ, திபெத்தும், தைவானும் சீன நாட்டின் உறுப்பு பகுதிகள் எ‌ன்ற கூற்றை ஏற்கும் பட்சத்தில் தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்