இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 15 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 17 பேர் அனுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 3 சிறுவர்கள், 2 பெண்கள், 10 ஆண்கள் என்றும், காயமடைந்தவர்களில் 2 சிறுவர்கள், 4 பெண்கள், 11 ஆண்கள் அடங்குவர் என்றும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரம் ஒன்றில் பொருத்தப்பட்ட கண்ணிவெடி மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.