முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் உள்ளிட்ட சில கட்சிகள் அடங்கிய `அனைத்து கட்சிகள் ஜனநாயக இயக்கம்' என்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், பெனாசிர் கராச்சியில் இருந்து திடீரென்று இஸ்லாமாபாத் வந்து அதிபர் முஷாரஃப்பை சந்தித்து பேசினார். தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து இருப்பது பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலர் தாரிக் அஜிஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் உடன் இருந்தனர்.