டோகோபில்லாவில் சுமார் 6,200 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அந்நகரத்தின் மேயர் லூயிஸ் மோயினோ தெரிவித்துள்ளார். அருகில் உள்ள மரியா எலினா நகரத்தில் 20 விழுக்காடு கட்டடங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சுமார் 7 ஆயிரம் பேர் வீடுகளை இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிலியின் வடக்கே உள்ள கலாமா, அரிகா நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் அங்குள்ள சுரங்கங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.