இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் விவரங்கள் பாகிஸ்தானிடம் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் இதுவரை சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தியா தங்களிடம் எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அயலுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.