தற்கொலைத் தாக்குதல் : 13 பாக். வீரர்கள் பலி!

Webdunia

சனி, 14 ஜூலை 2007 (16:02 IST)
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வசிரிஸ்தான் மாகாணத்தில் இன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமுற்றுள்ளனர்!

பாகிஸ்தான் துணை ராணுவப் படையினர் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது குண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று மோதி வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உறுதி செய்ததாக டான் தொலைக்காட்சி செய்தி கூறியுள்ளது.

அல் கய்டா - தாலிபான் இயக்கத்தினரின் செல்வாக்கு அதிகம் மிக்க பகுதி என்று கூறப்படும் வசிரிஸ்தானில் இத்தாக்குதல் நடந்துள்ளது. (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்