சீனா - பாகிஸ்தான் இடையே பேருந்து போக்குவரத்து

சீனாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பேருந்து சேவை வெற்றி பெற்றது. இதையடுத்து, மற்றொரு பேருந்து சேவையை தொடங்குவதற்கான கூட்டம் இஸ்லாமபாத்தில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இருந்து சீனாவிலுள்ள காஷ்கர் நகருக்கு இடையே இந்த புதிய பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பொதுத் தொடர்பு கூடுதல் செயலர் முகமத் அப்பாஸ் மற்றும் சீன அமைச்சர் சிங்கியாங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
----

வெப்துனியாவைப் படிக்கவும்