பங்குச்சந்தை இன்றும் ஏற்றத்துடன் நிறைவு

வியாழன், 10 அக்டோபர் 2013 (16:37 IST)
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் சென்செக்ஸ் 23.65 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20273 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 13.50 புள்ளிகள் உயர்ந்து 6021 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையின் நிறைவில் இன்று, டாடா மோட்டார், மகேந்திரா&மகேந்திரா, என்.டி.பி.சி, டாடா ஸ்டீல் மற்றும் மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ஹிண்டால்கோ, டாடா பவர், பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யூனியன் மற்றும் ஹெச்.டி.எப்.சி பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்