சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டு வந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 304 உயர்ந்து பவுன் 20456-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ. 2557-க்கு விற்பனையானது.
இன்றும் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 344 உயர்ந்து 20 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 2600-க்கு விற்கிறது.
இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 648 அதிகரித்துள்ளது.
வெள்ளி கிராம் ரூ. 45-க்கும், கிலோ ரூ. 42,055-க்கும் விற்பனையானது. தங்க இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.