பங்கு சந்தை: சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு

வியாழன், 8 செப்டம்பர் 2011 (17:11 IST)
மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று சென்செக்ஸ் குறியீடு 100.54 புள்ளிகள் அதிகரித்து 17,165.54 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசிய பங்குச் சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 28.60 புள்ளிகள் உயர்ந்து 5153.25 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.

சிப்லா, ஆர்ஐஎல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி, இந்துஸ்தான் யூனிலீவர், ஸ்டெர்லைட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டிசிஎஸ், டிஎல்எஃப், மாருதி சுஸுகி, ஹீரோமோட்டோகார்ப், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்தன.

ஜிந்தால் ஸ்டீல், கோல் இந்தியா, டாடா பவர், டாடா ஸ்டீல், பிஎச்இஎல், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி, ஜெய்ப்ரகாஷ் அசோ, ஓஎன்ஜிசி. ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்