ரூபாய் மதிப்பு 7 பைசா உயர்வு

வெள்ளி, 24 ஏப்ரல் 2009 (11:04 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா அதிகரித்தது.

காலை வர்த்தகம் துவங்கும் போது 1 டாலரின் விலை ரூ.49.85 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி மதிப்பை விட 7 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை ரூ.49.92-49.94.

இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று காலையில் குறைந்தாலும், 12 மணிக்கு பிறகு அதிகரித்தது. நேற்று மட்டும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 பைசா அதிகரித்தது.

இன்றும் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அத்துடன் ஆசியா நாட்டு நாணயங்களின் மதிப்பு அதிகரித்து, டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்