மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது குறைந்த குறியீட்டு எண்கள், காலை சுமார் 10 மணியளவில் அதிகரிக்க துவங்கின.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 199.43 புள்ளிகள் அதகரித்து குறியீட்டு எண் 16,123.15 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 65.50 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,865.90 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 310.37, மிட் கேப் 224.92,பி.எஸ்.இ. 500-148.34 புள்ளிகள் அதிகரித்தன. தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன.
தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி. 32.35 புள்ளிகள் குறைந்தன.
அதே நேரத்தில் நிஃப்டி ஜூனியர் 373.15, பாங்க் நிஃப்டி 83.90, சி.என்.எக்ஸ் 100-83.40,சி.என்.எக்ஸ் டிப்டி 62.95, சி.என்.எக்ஸ் 500-96.50, சி.என்.எக்ஸ் மிட் கேப் 267.25, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-92.20 புள்ளிகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 2110 பங்குகளின் விலை அதிகரித்தது. 2747 பங்குகளின் விலை குறைந்தது. 32 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி நிறுவனங்களின் பிரிவு குறியீட்டு எண் 1.73%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 3.28%, தொழில் நுட்ப பிரிவு 0.59%, பொதுத்துறை நிறுவனங்கள் 3.35%, வாகன உற்பத்தி பிரிவு 0.33%, வங்கி பிரிவு 0.57%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 5.39%, ரியல்எஸ்டேட் 6.76, மின் உற்பத்தி பிரிவு 5.11% அதிகரித்தன. தகவல் தொழில்நுட்ப பிரிவு 0.47% குறைந்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 20 பங்குகளின் விலை அதிகரித்தது. 10 பங்குகளின் விலைகள் குறைந்தது.