பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு!

செவ்வாய், 17 ஜூன் 2008 (15:50 IST)
பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கரயனபாசனப்பகுதிக்கு தண்ணீர் திறந்தவிடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயனகால்வாய் ஆய்க்காட்டு பூமிக்கு முதல்போக பாசனத்திற்கு நேற்று மாலை தண்ணீரதிறந்தவிடப்பட்டது.

கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.கே.பி.ராஜா மாவட்ட ஆட்சியர் மகேசனகாசிராஜன் ஆகியோர் மதகுகளை திறந்து வைத்தனர்.

காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து தினமும் 200 கனஅடி தண்ணீர் வீதம் திறக்கப்படுகிறது. படிப்படியாக 500 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்