பாசனத்திற்கு 14,987 கன அடி நீர் திறப்பு!

செவ்வாய், 17 ஜூன் 2008 (11:43 IST)
காவிரி பாசன பகுதிகளின் விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 14,987 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1,769 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

கல்லணையில் இருந்து பாசனத்திற்காக வெண்ணாறு, காவிரியில் விநாடிக்கு தலா 4,963 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதே போல் கல்லணை கால்வாயில் 1,500 கன அடி, கொள்ளிடத்தில் 1,287 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்று பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்