தடுப்பூசி போட்டுக்கொண்டு ரூ.250 மருத்துவமனைக்கு நன்கொடை அளித்த மத்திய அமைச்சர்

செவ்வாய், 2 மார்ச் 2021 (20:58 IST)
கொரனோ தடுப்பூசி போட்டுக் கொண்ட மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு தடுப்பூசி போட்ட மருத்துவமனைக்கு ரூபாய் 250 நன்கொடையாக அளித்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
நேற்று முதல் அடுத்த கட்ட கொரனோ வைரஸ் தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு வருவது தெரிந்ததே. பிரதமர் மோடி முதல் பல பிரபலங்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கொரனோ தடுப்பூசியை போட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் அவர்கள் இன்று கொரனோ வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன்பிறகு தனக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவமனைக்கு நன்கொடையாக ரூபாய் 250 வழங்கியுள்ளார். இது குறித்து அமைச்சர் ரவிசங்கர் தனது டுவிட்டரிலும் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மத்திய அமைச்சர் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டு வெறும் ரூபாய் 650 மட்டுமே நன்கொடை வழங்கிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்