விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்வெளி ஓடம் வங்கக் கடலில் வெற்றிகரமாக விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்படையினரால், ராக்கெட் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வரும் காலங்களில், இந்த ராக்கெட் இஸ்ரோ ஓடு தளத்தில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 10 முறை விண்ணில் ஏவ பயன்படுத்தக்கூடிய இதனைத் தயாரிப்பதற்கு ரூ.95 கோடி வரை செலவானது. எனினும், எதிர்காலத்தில் ராக்கெட் தயாரிப்பதற்குப் பதிலாக, இந்த விண்வெளி ஓடத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது 10 மடங்கு அளவுக்கு செலவு குறையும்.
ஆர்.எல்.வி டிடி மறுபயன்பாட்டு ராக்கெட் வெற்றிகரமாக ஏவியதற்கு, குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.