மால்டா மாவட்டம் காமிக்சாக் பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவிக்கு நூர் அலி என்னும் இளைஞன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போதும் நூர் அலி பின் தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துள்ளான்.
இதுகுறித்து அந்த மாணவி தன் தாயாரிடம் புகார் செய்துள்ளார். உடனே மாணவியை அழைத்துக் கொண்டு அவரது தாயார் நூர் அலி வீட்டிற்கு சென்று பிரச்சனை தொடர்பாக பேசிக் கொண்டிருக்கும் போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றிபோய் நூர் அலி, மாணவி மற்றும் அவரது தாயாரை இரும்பு கம்பியாம் தாக்கியுள்ளார்.