நுகர்வோர் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் - மக்கள் கருத்துத் தெரிவிக்க கெடு நீட்டிப்பு

செவ்வாய், 6 ஜூலை 2021 (10:01 IST)
நுகர்வோர் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்ய மக்கள் கருத்துத் தெரிவிக்க அளிக்கப்பட்டிருந்த கெடு நீட்டிப்பு. 

 
நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2020ல் திருத்தத்தை முன்மொழிந்துள்ளது இந்திய அரசு. இந்த திருத்தம் குறித்து மக்கள் கருத்துத் தெரிவிக்க அளிக்கப்பட்டிருந்த காலக்கெடு தற்போது நீட்டிக்கப்படுவதாக இந்திய நுகர்வோர் விவகார, உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்றும் அந்த அமைச்சகத்தின் உத்தரவு கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்