பிரியங்காவைப் பார்த்த ஆம் ஆத்மி தொண்டர்கள் அவருடன் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தலையில் காந்தி தொப்பி அணிந்து வந்த ஆம் ஆத்மி தொண்டர்களை, காங்கிரசில் இணையும்படி பிரியங்கா சிரித்துக்கொண்டே கூறினார்.
இந்த சூழ்நிலையில் ஆம் ஆத்மி தொண்டர்கள், பிரியங்காவை சந்தித்தது ஆம் ஆத்மி கட்சியின் மேலிடத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த ஜனவரி மாதம் ராகுல் காந்தியும் ஆம் ஆத்மி தொண்டர்களை யதார்த்தமாக சந்திக்க நேர்ந்தது. அப்போது, அவர்களிடம் காங்கிரசில் இணையும்படி ராகுல் காந்தி நகைச்சுவையாக கூறியது குறிப்பிடத்தக்கது.