இந்த நிலையில், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
''கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமபடுத்துவதாக கூறி ஆட்சியைப் பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி, ஆட்சியில் அமர்ந்தும் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார். அனைத்து பொருட்களின் விலையும் அபரிமிதமாக உயர்ந்துள்ள நிலையில், உழைக்கும் மக்கள் விரும்பும் மதுபானங்களின் விலையும்தான்.
ஏழை எளிய மக்களுக்கான விலையில் இருந்த மதுவை விலை உயர்த்திவிட்டனர். விலையை உயர்த்தினாலும் அதன் தரத்தையாவது உயர்த்தி இருக்கலாம். ஆனால், அதிக லாபம் ஈட்டும் நோக்கில், தரமற்ற மதுவை விநியோகித்து, நம் மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறார்கள். எனவே தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமையும்போது, தரமானது மட்டுமின்றி குறைந்த மற்றும் தரமான மதுபானத்தை அளிக்க உறுதியளிப்பதாக'' தெரிவித்துள்ளார்.